Friday, November 11, 2011

மாடு சினை பிடிக்காமல் போக காரணங்களை அறிந்து கொள்ளுங்கள்


 ந்தியாவில் இருக்கும் பசுக்கள் கலப்பினத்தை சேர்ந்தவை தான். அதிகம் பால் பெற வேண்டிய நிலையில் மேலைநாட்டு இனங்களுடன் இந்திய இனங்களை இனவிருத்தி செய்து உருவாக்கப்பட்டவை. இதனால் சில காரணங்களால் இவற்றின் நோய் எதிர்ப்பு திறன், சினைபிடிக்கும் திறன் போன்றவை நாட்டு இனங்களை விட்டு வேறுபடுகின்றன. பொதுவாக, மாடுகள் சினைபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்களை இங்கு பார்க்கலாம்.

1. பிறவிக் குறைபாடுகளினால் ஏற்படும் இனவிருத்திக் கோளாறுகள்.
2. மரபியல் காரணங்களால் ஏற்படும் இனவிருத்திக் கோளாறுகள்.
3. கலப்பின மாடுகளில் வைட்டமின் ஏ பற்றாக்குறை மிகுதியாக காணப்படுகிறது. சினைபிடித்த மாடுகளில் வைட்டமின் ஏ பற்றாக்குறை ஏற்படும் போது கருச்சிதைவு அல்லது உடல் நலம் குன்றிய அல்லது இறந்த கன்றுக்குட்டி பிறக்க வாய்ப்புள்ளது.
4. தாது உப்புக்களில் பாஸ்பரஸ் உப்பு குறைவினால் மாடு எளிதில் சினைபிடிக்க முடியாமல் போகலாம். பாஸ்பர உப்பு, வைட்டமின் ஏ பற்றாக்குறையும், மாடுகள் உலர்ந்த காய்ந்த புல்வெளிகளில் மேய்வதால் ஏற்படுகிறது. மேலும், இதனால் மாடு ஆண்டிற்கு ஒரு முறை தான் கன்று ஈனும் நிலை உருவாகிறது.
5. உடலிலுள்ள சில கணநீர்கள் என்னும் ஹார்மோன்கள் சரியான அளவில் உற்பத்தியாகாமல் இருத்தல்.
6. கருப்பையில் நோய் இருக்கும் போது அறையிலிருந்து கண்ணாடி போன்ற சீல் பிடித்துக் காணப்படும். மேலும், சூலகத்தில், கருவக்கட்டி உண்டாவதாலும் கூட மாடு எளிதில் சினைபிடிக்காமல் போகலாம்.
7. மாடுகளுக்கு நுண்கிருமிகளால் காய்ச்சல் உண்டாகி மாடுகள் சினைப்பிடிக்க இயலாமல் போகும். ஆகவே, எந்த விதமான காய்ச்சல் தாக்கினாலும், உடன் மருத்துவ உதவி அளிக்க வேண்டும். கால்நடைகளுக்கு தக்க தருணத்தில் சப்பை, கோமாரி, வெக்கை போன்ற நோய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும்.
8. சில மாடுகளில் கருமுட்டையானது, கருவூட்டல் செய்த பிறகு சூலகத்திலிருந்து 48 மணி நேரம் அல்லது அதற்கும் காலந்தாழ்த்தி வெளிப்படுதல்.
9. சில பசுக்களிலும், எருமைகளிலும் "ஊமைச்சினைப்பருவம்" காணப்படுவதால் சரியான சினைத்தருணத்தில் இருக்கும் மாடுகள் கூட, கருவூட்டல் செய்ய இயலாமல் போகும். ஒரு இடத்தின் தட்பவெப்ப நிலையும், மாடுகளின் இனவிருத்தியினை பாதிக்கின்றன. சுற்றுப்புறத்தில் வெப்பமும், ஈரப்பதமும் அதிகமாக இருக்கும் போது மாடுகளின் சினைத்தருணச் செயல்கள் தடைபடுகின்றன.
10. விவசாயிகள் தங்கள் மாடுகளில் சினை பார்த்த உடன் சினை இல்லை என்றால் உடனே கருவூட்டல் செய்ய வேண்டும் என்று நினைப்பது மிகவும் தவறு. மாடுகளுக்கு சரியான சினைத்தருணத்தில் இருக்கும் போது தான் கருவூட்டல் செய்ய வேண்டும்.
11. மாட்டுத்தொழுவங்கள், மாடுகளை நேரடியான சூரிய வெப்பம், கடுங்குளிர் மற்றும் மழை போன்றவற்றிலிருந்து காப்பாற்றக்கூடிய வகையில் வசதியானதாக இருக்க வேண்டும்.
12. மாடுகளுக்கு தேவையான அளவு சுத்தமான, குளிர்ந்த நீர் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment