வேளாண் சாகுபடியில் பயிர்களுக்கு ஏற்ப ஆர்த்தோ பாஸ்பரிக் அமிலத்தின் சதவீதத்தை குறைத்தும் அதிகரித்தும் பயன்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என கூடப்பாக்கம் வேங்கடபதி ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார்.
வேளாண் பயிர்கள் வளர்ச்சிக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் மிக அவசியம். பாஸ்பரஸ் என்ற மணிச்சத்து, பயிர்களின் வேர்களை அதிகரிக்க உதவும். சூப்பர் பாஸ்பேட் வயலில் இடும்போது முழுமையாக கரைவதில்லை. 50 சதவீதம் கரைந்த நிலையில் இதை பயிர்கள் எடுத்துக்கொள்ள பல இடையூறு ஏற்படுகிறது. இதனால் மகசூல் குறையும்.
குறிப்பிட்ட பயிர்களுக்கு பாஸ்பரஸ் அதிக அளவில் தேவைப்படும். இத்தகைய பயிர்களுக்கு ஏற்ற மணிச்சத்து உரங்கள் மார்க்கெட்டில் கிடைப்பதில்லை. மணிச்சத்து உரம் தயாரிக்க, ஆர்த்தோ பாஸ்பரிக் அமிலம் மூலப் பொருளாகப் பயன்படுகிறது. இத்திரவத்தை செடிகளுக்கு ஏற்ப குறைத்தும் அதிகரித்தும் தண்ணீருடன் கலந்து வேர்பகுதியில் செலுத்தினால் தேவையான மணிச்சத்து கிடைத்து, அதிக வேர்கள் உருவாகி, செடிகள் ஆரோக்கியமாக வளர்ந்து அதிக மகசூலைத் தரும்.
இந்த முறையை சவுக்கு, வாழை பயிர்களில் சோதித்துப் பார்த்ததில் வேர்கள் அதிகளவில் ஊடுருவி, தேவையான சத்துக்களை எடுத்துக் கொண்டன. சவுக்கு வளர்ப்பில் பரிசோதனை செய்ததில், ஒரு சவுக்கு மரத்தின் எடை 3 ஆண்டுகளில் 80 கிலோ, 50 அடி உயரம், 20 அங்குலம் சுற்றளவு கொண்டதாக வளர்ந்தது. மேலும் சில பயிர்களில் இம்முறையைப் பயன்படுத்தி சோதித்துப் பார்த்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது. ஆர்த்தோ பாஸ்பரிக் அமிலம் பயன்படுத்துவதால் நோய் தடுப்பு மருந்தாகவும் செயல்படுகிறது.
-வேங்கடபதி, கூடப்பாக்கம்.
வேளாண் பயிர்கள் வளர்ச்சிக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் மிக அவசியம். பாஸ்பரஸ் என்ற மணிச்சத்து, பயிர்களின் வேர்களை அதிகரிக்க உதவும். சூப்பர் பாஸ்பேட் வயலில் இடும்போது முழுமையாக கரைவதில்லை. 50 சதவீதம் கரைந்த நிலையில் இதை பயிர்கள் எடுத்துக்கொள்ள பல இடையூறு ஏற்படுகிறது. இதனால் மகசூல் குறையும்.
குறிப்பிட்ட பயிர்களுக்கு பாஸ்பரஸ் அதிக அளவில் தேவைப்படும். இத்தகைய பயிர்களுக்கு ஏற்ற மணிச்சத்து உரங்கள் மார்க்கெட்டில் கிடைப்பதில்லை. மணிச்சத்து உரம் தயாரிக்க, ஆர்த்தோ பாஸ்பரிக் அமிலம் மூலப் பொருளாகப் பயன்படுகிறது. இத்திரவத்தை செடிகளுக்கு ஏற்ப குறைத்தும் அதிகரித்தும் தண்ணீருடன் கலந்து வேர்பகுதியில் செலுத்தினால் தேவையான மணிச்சத்து கிடைத்து, அதிக வேர்கள் உருவாகி, செடிகள் ஆரோக்கியமாக வளர்ந்து அதிக மகசூலைத் தரும்.
இந்த முறையை சவுக்கு, வாழை பயிர்களில் சோதித்துப் பார்த்ததில் வேர்கள் அதிகளவில் ஊடுருவி, தேவையான சத்துக்களை எடுத்துக் கொண்டன. சவுக்கு வளர்ப்பில் பரிசோதனை செய்ததில், ஒரு சவுக்கு மரத்தின் எடை 3 ஆண்டுகளில் 80 கிலோ, 50 அடி உயரம், 20 அங்குலம் சுற்றளவு கொண்டதாக வளர்ந்தது. மேலும் சில பயிர்களில் இம்முறையைப் பயன்படுத்தி சோதித்துப் பார்த்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது. ஆர்த்தோ பாஸ்பரிக் அமிலம் பயன்படுத்துவதால் நோய் தடுப்பு மருந்தாகவும் செயல்படுகிறது.
-வேங்கடபதி, கூடப்பாக்கம்.
இந்த அமிலம் எங்கு கிடைக்கும்
ReplyDelete