Friday, November 11, 2011

காய்கறி பயிர்களில் நல்ல மகசூலுக்கு சிக்கன நீர்ப்பாசனம்



ண்ணீரின் தேவை உயர்ந்து வருகிறது. ஆனால் முன்பு போல் கிணறுகளில் நீர் இல்லை. இருந்தாலும் நீரை அளவான அளவில் பயிர்களுக்கு பாய்ச்சும் போது மகசூலும் அதிக அளவில் கிடைக்கிறது. சரியான அளவான நீர்நிர்வாகத்தால் காய்கறிகளில் பூச்சிநோய்களின் தாக்குதல் மற்றும் களைகள் கட்டுப்படுத்தப்படுவதும் தெரியவந்துள்ளது. எனவே காய்கறி பயிர்களில் மண்ணின் தன்மைக்கேற்ப நல்ல வடிகால் வசதியுடைய நிலத்தின் பயிர்களின் தேவைக்கேற்றவாறு சரியான அளவில் காலம் தவறாமல் நீர்ப்பாசனம் செய்வது அவசியம் ஆகும். இதற்கு எந்த மாதிரியான சூழ்நிலையில்  நீர்ப்பாசனத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்வது முக்கியம்.

பயிர் சாகுபடி இடைவெளி, மண்ணை பயன்படுத்தும் முறைகள், மண் வகைகள், பயிர்சாகுபடி முறைகள், மழையளவு, அந்த பகுதியில் நீர் ஆவியாகும் தன்மை, தண்ணீர் பெறும் முறைகள், தண்ணீர் பாய்ச்சும் அளவு, தண்ணீர் பாய்ச்சுவதற்கு ஆகும் செலவு, மண்ணின் கார அமிலத்தன்மை, பயிர்சாகுபடி செய்யும் பரப்பு, தண்ணீர் பாய்ச்சும் செலவு, மண்ணின் தன்மைகள், நீர் விரைவாக பாய்ச்சு தன்மைகள் ஆகிய காரணிகளை வைத்து நீர்ப்பாசன காலகட்டத்தை தேர்வு செய்யலாம்.

105 நாட்கள் வயதுடைய ஒரு காய்கறி பயிரின் வாழ்க்கை பருவத்தை, முளைக்கும் பருவம் (20 நாட்கள்), வளர்ச்சி பருவம்(30 நாட்கள்), பூ மற்றும் காய்ப்பருவம்( 40நாட்கள்), முதிர்ச்சிப் பருவம்( 15 நாட்கள்) என்று பிரிக்கலாம். இதில் முதல் 20நாட்களும், கடைசி 15 நாட்களும் அதிகமாக நீர்ப்பாய்ச்ச தேவையில்லை. ஆனால் வளர்ச்சிப்பருவத்திலும், பூ மற்றும் காயாகும் பருவத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கக் கூடாது. இந்த காலகட்டத்தில் பயிருக்கு போதிய சரியான அளவு தண்ணீர் அளித்தால் மட்டுமே நல்ல மகசூலை எட்ட முடியும்.

No comments:

Post a Comment